follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.

அதன்படி, சர்வதேச போட்டிகளில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினால், பச்சை குத்திக்கொள்வது, நெக்லஸ்கள் மற்றும் காதணிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முடியை ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனத் ஜயசூரிய தற்காலிகமாக பயிற்சியாளராக இருந்தாலும், தேசிய வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் பாடசாலை விளையாட்டு வீரர்களும் இருப்பதாகவும், எனவே இலங்கை அணி ஒழுக்கத்துடன் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிய விஷயங்களை கூட ஒழுங்காக செய்ய வேண்டும். தற்போது சர்வதேச போட்டிகளுக்கு வரும்போது முடி, காதணி, டாட்டூ போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளோம்..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது....

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...