follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎன் மனதில் இருப்பவரை இப்போது கூற முடியாது

என் மனதில் இருப்பவரை இப்போது கூற முடியாது

Published on

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (23) பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தனது கட்சியில் இருந்து போட்டியிட பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகவும், தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...