follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

Published on

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து காரணமாக வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் ஊடாக கணக்குகள் தீர்த்துக் கொள்ளப்படும் என்றும், நாட்டை விட்டு வெளியேற இடமளிக்க மாட்டோம் என்றும், ஒளிந்து கொள்ள இடமில்லை என ஹட்சனுக்கு தெரிவிப்பதாக கூறிய வசந்த சமரசிங்கவின் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்து நாட்டை விட்டு வெளியேறினால் அந்த நாடுகளில் திசைகாட்டியின் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பதால் பார்த்துக் கொள்வார்கள் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வன்முறையற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக நாம் செயற்படுமாறு பரிந்துரைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...