follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்அடுத்து வருவது கொரோனாவை விட இன்னும் மோசமானதாக இருக்கலாம்

அடுத்து வருவது கொரோனாவை விட இன்னும் மோசமானதாக இருக்கலாம்

Published on

தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.

பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும் எனவும் ஒமிக்ரான் குறித்து அதிக தகவல்கள் வெளியாகும் வரை, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாம் அனைத்தையும் கடந்துவிட்ட நிலையை அனுமதிக்க முடியாது. மேலும், நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது” என தெரிவித்தார்.

ஒமிக்ரான் திரிபு அதன் ஸ்பைக் புரதத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்க அறியப்பட்ட பிறழ்வுகள் இருப்பதாக கூறினார்.

“ஆனால், தடுப்பூசிகளால் தூண்டப்படும் ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் வகையிலான கூடுதல் மாற்றங்கள் உள்ளன.

“இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் வரை நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எனவும் பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...