follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2நாட்டு பிள்ளைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பு

நாட்டு பிள்ளைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பு

Published on

இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் கல்வி பிரிவிடமிருந்து ஆதரவு பெற்றுக்கொள்ளும் ஆதேவேளை அதற்கான மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் மேம்பட்ட கல்வி முறையொன்றை நாட்டில் உருவாக்கி, இந்நாட்டு பிள்ளைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்க எதிபார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெறுமதியான இசைக்கருவிகளும் மிகக் குறுகிய காலத்திற்குள் வழங்கி வைக்கப்பட்டதையிட்டு மாணவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 96 உறுப்பினர்கள் மாணவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பாராளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தலைமையில் நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...