follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1எதிர்க்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்க்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published on

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 30 பேரின் கையொப்பங்களுடன் இந்தக் கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பல்வேறு உத்திகளை கொண்டு ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

சாத்தியமான முதல்நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு அதிகபட்ச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...