ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமுகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முழு அரச சேவையினரின் சம்பள கோரிக்கையை ஏற்காமல், பணிக்குச் சமுகமளித்த ஒரு சிலருக்கு மட்டுமே சம்பள உயர்வை வழங்குவதற்கான தீர்மானத்தைத் தடுக்க சட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கே சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தமது தொழிற்சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.