நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலை காலங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கவனத்தை ஈர்த்துள்ளது.
சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.