follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு

Published on

ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு நேற்று (09) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன் பிரகாரம் 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும், 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், ஓய்வூதியத்தைப் பாதிக்காத வகையில் இந்த சம்பள அதிகரிப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வழங்கப்படும் பாராட்டுச் சான்றிதழ்கள் உரிய நாட்களில் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களின் தனிப்பட்ட கோப்புகளில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இவர்களின் பதவி உயர்வுகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...