follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - ஹரிணி

எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் – ஹரிணி

Published on

இந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்நாட்டு மக்கள் நம்புவதாகவும், தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார என இந்நாட்டு மக்கள் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

நாவலப்பிட்டி மாவத்துறை நகரில் நடைபெற்ற “உடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹரிணி அமரசூரிய, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கூடியுள்ளனர் எனவும், மக்களை தவறாக வழிநடத்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினை நோக்கி திரண்டிருக்கும் நாட்டு மக்கள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் அவமானங்களை ஏற்காது, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் படையில் நாளுக்கு நாள் இணைந்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...