follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

Published on

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...