follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுஇரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் இன்று

இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் இன்று

Published on

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை அவரின் சொந்த ஊரான திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார்.

இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் அவரின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...