follow the truth

follow the truth

October, 6, 2024
HomeTOP2சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

Published on

ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்து அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.

பொத்துவிலிலிருந்து கொழும்பு வந்த குறித்த இளைஞன் ஐக்கிய அரசு இராச்சியத்தின் தூதரக அலுவலகத்திற்குசெல்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தான் இதற்கு முன்னர் விசேட முக்கிய பிரதிநிதிகள் பயணிக்கும் வாகன பேரணியை கண்டிராத காரணத்தினால் தனது கையடக்க தொலைபேசியில் அதனை ஒளிப்பதிவு செய்ததாக மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுராதபுரம் முதல் மஹவ ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே...

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும்  அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும்...