கொழும்பின் பல பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, கொட்டிகாவத்தை – முல்லேரிய பிரதேச சபைக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.