ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் இலங்கை,நேபாளம், மாலைத்தீவுக்கான புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் (David Sislen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிஸ்லேனுக்கு முன்னதாக உலக வங்கி வதிவிடப் பணிப்பாளராக பரீஸ் ஹதாத் – சர்வோஸ் (Faris Hadad-Zervos) பணியாற்றினார்.