சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே – கலஹிடியாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்தும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில்கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (04) காலை தேவால சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேரூந்தின் பக்கவாட்டு பகுதி பலத்த சேதமடைந்தது.
விபத்து ஏற்படும் போது அந்த பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.