follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுகம்பஹா வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசேட நடவடிக்கை

கம்பஹா வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசேட நடவடிக்கை

Published on

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர் வடிகால் தடைகளை கண்டறிய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய கம்பஹாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற மும்முனை வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு குறுகிய கால தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறுகிய கால தீர்வுகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் காரணமாக அத்தனகல்லு படுகையில் தற்காலிக நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக குறைந்து வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...