கடந்த மாதம் மாத்திரம் 11 ரயில்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மலையகப் பாதையில் தண்டவாளங்களின் பராமரிப்பு இன்மையால் சில ரயில்கள் தடம்புரண்டுள்ளன.
பெரும்பாலான ரயில்களின் இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடம்புரண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மலையக ரயில் பாதையை உரிய முறையில் பராமரித்து ரயில் தடம் புரளாமல் இருக்கவும், ரயில் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் ரயிலை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.