follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP2கண்டியில் வெடிகுண்டு புரளி - ஒருவர் கைது

கண்டியில் வெடிகுண்டு புரளி – ஒருவர் கைது

Published on

இன்று (02) பிற்பகல் கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரான கினிகத்தேனை கடவல, பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குறித்த தொலைபேசி தன்னிடம் இருக்கவில்லை எனவும் நேற்று (01) பிற்பகல் குறித்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு...

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை...

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு...