இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேரூந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.