follow the truth

follow the truth

July, 6, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் - விரைவில் சந்தைக்கு

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

Published on

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார்.

ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயப்படுத்தலின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பில் லசந்த ருவன் லங்காதிலக்க என்ற விவசாயி மிளகாய் ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த புதிய வகை ஐஸ் கீரிமின் சுவையை அறியும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அது வழங்கப்பட்டது.

காரம் மற்றும் இனிப்புச் சுவை இதில் கலந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கென இரு பிரிவுகளைக் கொண்ட தயாரிப்பாக இதனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

உணவுகள் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. மற்றவை நமக்கு விஷமாக மாறுகின்றன. எனவே, நாம் என்ன உணவு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை

எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்...