follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP2திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

Published on

இலங்கைக்கு வருகை தந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த குறித்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணி தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்...