follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடியிலிருந்து 1 கோடி ரூபா

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடியிலிருந்து 1 கோடி ரூபா

Published on

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கோடியே எழுநூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினேழு ரூபாவை நன்கொடையாக வழங்கியது தொடர்பான காசோலையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...