follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் நாளை, நாளை மறுநாள் சுகயீன விடுமுறையில்

பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் நாளை, நாளை மறுநாள் சுகயீன விடுமுறையில்

Published on

கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் கல்விசாரா சேவையிடம் தேசிய கொள்கையை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது பிரச்சினைகளை குறைந்தபட்ச மட்டத்தில் தீர்த்து வைப்பதற்கு தேவையான எழுத்து மூலமான உடன்படிக்கைகள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் 50 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து நல்ல பதில் கிடைக்குமாயின் நாளை அல்லது நாளை மறுதினம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதன் இணைத் தலைவர் மங்கள தம்பரேரா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...