இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ஒரு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (20) பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
இந்த விஜயம் குறித்து தனது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள அவர், தனது புதிய பதவிக்காலத்தில் இலங்கைக்கான முதலாவது விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஒரு நாள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்தார்.
முதலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள தமிழர் கட்சியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை நேற்று பிற்பகல் சந்தித்ததுடன், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.
இந்த விஜயம் குறித்து தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள அவர், தனது புதிய பதவிக்காலத்தில் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மிகவும் திறம்பட நிறைவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் நம்பகமான நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.