follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1இலங்கையின் நம்பகமான நண்பராக இந்தியா தொடரும் - ஜெய்சங்கர்

இலங்கையின் நம்பகமான நண்பராக இந்தியா தொடரும் – ஜெய்சங்கர்

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ஒரு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (20) பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.

இந்த விஜயம் குறித்து தனது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள அவர், தனது புதிய பதவிக்காலத்தில் இலங்கைக்கான முதலாவது விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்தார்.

முதலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள தமிழர் கட்சியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை நேற்று பிற்பகல் சந்தித்ததுடன், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

இந்த விஜயம் குறித்து தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள அவர், தனது புதிய பதவிக்காலத்தில் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மிகவும் திறம்பட நிறைவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் நம்பகமான நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...