பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகள் குழுவிற்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (21) சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 289 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.