நாளை (21) பொசன் தினத்தில், சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிடுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உறவினர்களால் நாளை ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.