follow the truth

follow the truth

April, 20, 2025
Homeவிளையாட்டுசீனா டெனிஸ் கழகத்தின் அதிரடி அறிவிப்பு

சீனா டெனிஸ் கழகத்தின் அதிரடி அறிவிப்பு

Published on

சீனா டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய் காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.

உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய், கடந்த 03 வாரங்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமது வீராங்கனைகளை போட்டிகளில் பங்கேற்குமாறு எவ்வாறு தம்மால் அழைப்பு விடுக்க முடியும் என சீன மகளிர் டென்னிஸ் கழகத்தின் தலைவர் ஸ்டீவி சிமொன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக்குடனான காணொளி அழைப்பில் தாம் பாதுகாப்பாகவும் நலத்துடனும் இருப்பதாக பெங் சுவாய் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளி பெங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாயினும் பெங் சுவாய் காணாமல்போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சீனா டெனிஸ் கழகத்தினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...