follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்

Published on

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை காயப்படுத்தியதாக ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமைக்கு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும்கட்சிக் கூட்டத்தில், தன்னை தாக்கி காலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவின் இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞருக்கு அறிவித்துள்ளேன் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து – திங்களன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னாரில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக...

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...