பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை காயப்படுத்தியதாக ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமைக்கு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும்கட்சிக் கூட்டத்தில், தன்னை தாக்கி காலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவின் இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞருக்கு அறிவித்துள்ளேன் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.