follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த Muslim Aid Sri Lanka

இலங்கையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த Muslim Aid Sri Lanka

Published on

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முஸ்லிம் எய்ட் (Muslim Aid Sri Lanka) நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இலங்கையில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள் மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யும் பணிகளை இலங்கையில் முன்னெடுத்து வருகிறது.

முஸ்லிம் எய்ட் (Muslim Aid Sri Lanka) 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் நாட்டில் புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பணிகளை முதன்மையாக கொண்டு மே 2005 இல் நிறுவப்பட்டது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கி வருவதோடு, நுண்கடன், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம், வீடு உள்ளிட்ட பல நீண்ட கால மேம்பாட்டு உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றும் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான அபிவிருத்தித் திட்டத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்ட முஸ்லிம் எய்ட் இலங்கையில் தனது 15 வருட சேவை ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.

இலங்கையில் தனது 15 வருட சேவையினை பூர்;த்தி செய்வதை முன்னிட்டு, முஸ்லிம் எய்ட் இன் பிரதம நிறைவேற்று பணிப்பளர் காஷிப் ஷபீர் மற்றும் முஸ்லிம் எய்ட் சர்வதேச நிகழ்ச்சித் தலைவர் அபு அகீம் ஆகியோர் இலங்கை வந்துள்ளதோடு பல நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு அம்சமாக விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதற்காக கிண்ணியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து திருகோணமலை குச்சவெளிப் பிரிவில் உள்ள வறிய மற்றும் கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...