follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2மக்களை மீள்குடியேற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை

மக்களை மீள்குடியேற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை

Published on

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவும் நேற்று(08) கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெள்ளம் வடிந்ததன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன், மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அவர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி அவ்வப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை வினைத்திறனாக்க தேவையான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் என சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...