follow the truth

follow the truth

September, 24, 2024
HomeTOP1மின்சார மற்றும் ஹைபிரிட் வாகன இறக்குமதிக்கு முதலிடம்

மின்சார மற்றும் ஹைபிரிட் வாகன இறக்குமதிக்கு முதலிடம்

Published on

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதிர்காலத்தில் அறிவிக்கும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் ‘ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள காணி பாவனை, பசுமையான திணைக்களம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வுத் திட்டம், அரச நிறுவனங்களின் வளாகங்களில் மரம் நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளதுடன், இதன் மூலம் நகர்ப்புறங்களில் காற்றின் வெளியேற்றத்தைக் குறைக்க பங்களிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையர்கள் எவ்வாறு ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள்...