follow the truth

follow the truth

July, 6, 2024
Homeவிளையாட்டுஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்

ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்

Published on

இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. 160 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தமது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எமது அணியின் பலம் பந்து வீச்சு. கடந்த போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசி பல போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளோம். அதனால்தான் நாம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து. பந்து வீச்சில் எதிர் அணியை வீழ்த்த திட்டமிட்டோம். எமது இலக்கு 160 க்கும் அதிக ஓட்டங்களாக இருந்தது.

எனினும் இந்த மைதானத்தை பொருத்த வரையில் எமது ஓட்ட இலக்கு 130 ஆக இருந்திருக்க வேண்டும். அதனை பின்னரே சுதாகரித்தோம். இந்த மைதானத்தை பொறுத்த வரையில் 130 என்பது 180 க்கும் அதிகமான ஓட்டங்களுக்கு சமமாகும். எவ்வாறாயினும், இரண்டாவதாக பந்து வீசி நாம் பாரிய அழுத்தத்தை எதிரணிக்கு கொடுத்திருந்தோம்.

எடுத்த தீர்மானித்தில் உள்ள தவறை விட, எமது ஓட்ட இலக்கில்தான் தவறு உள்ளது என நான் நினைகிறேன்..” என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

அருண தர்ஷனவுக்கும் ஒலிம்பிக் வாய்ப்பு

இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி பெற்றுள்ளார். இதற்கமைய அருண தர்ஷன...

பும்ரா ஓய்வு?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான...

சர்வதேச உயரம் தாண்டுதல் சாம்பியன் Jacques Freitag கொலை

சர்வதேச புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் உயரம் தாண்டுதல் வீரர் Jacques Freitag கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட...