follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1ஜனாதிபதியின் மும்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதியின் மும்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Published on

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றறிக்கைகளை நம்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (05) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...