follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2தேர்தலுக்கு தயாராகும் UNP : ரவி-ஹரின் மற்றும் பிர்தௌஸ் பாரூக் ஆகியோருக்கு புதிய பதவிகள்

தேர்தலுக்கு தயாராகும் UNP : ரவி-ஹரின் மற்றும் பிர்தௌஸ் பாரூக் ஆகியோருக்கு புதிய பதவிகள்

Published on

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (ஜூன் 2) புதிய அலுவலகத்தை நியமித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அங்கு தேசிய தேர்தல் அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு மொஹமட் பிர்தௌஸ் பாரூக் (Mohamed Firdouse Farook) ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராகவும், பொருளாளராக இருந்த மிஸ்பா சத்தார் உப தலைவராகவும் கிரிஷான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தலைவர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகளின் பதவிகளை தொடர்ந்தும் தக்கவைக்க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மொஹமட் பிர்தௌஸ் பாரூக் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...