follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP1நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து விசேட அறிவிப்பு

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து விசேட அறிவிப்பு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை பாடசாலைகள் நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் கீழே உள்ளன.

சப்ரகமுவ மாகாணம்

* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

தென் மாகாணம்

*காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
*மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

மேல் மாகாணம்

* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச். டி. குஷான் சமீர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது

அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும்...

அடுத்த 03 ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு

இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக...

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப்...