follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி

Published on

சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கள் காரணமாக 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5 பேரை காணவில்லை.

சீரற்ற காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

9,764 குடும்பங்களைச் சேர்ந்த 36,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,174 பேர் 32 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

4,119 வீடுகள் பகுதியளவிலும், 28 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பலவெல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 377 மில்லிமீற்றரை எட்டியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலப் பொறுப்பதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...