follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்

இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்

Published on

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது.

அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் வெப்ப அலை காரணமாக, பகல் பொழுதில் வீடுகளில் இருந்து வௌியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பீகாரில் உள்ள பாடசாலையில் வெப்ப அலையை தாங்கிக்கொள்ள முடியாத மாணவிகள் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் வசிக்கும் கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய...