இலங்கையில் தற்போது சுற்றுலா துறையை மீள்கட்டியெழுப்பும் சூழல் உருவாகியுள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு
வரவழைக்க தற்போதுள்ள சுற்றுலா விதிமுறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என இலங்கை அரசிடம் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு தடையாக இருந்த சட்ட விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் வரவழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புதிய சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.