follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1ISIS தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு

ISIS தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு

Published on

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இருக்கிறார்களா என்பதை விசாரணை மேற்கொள்ள சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID), பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (TID), மாநில புலனாய்வுப் பிரிவு (SIS) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) அதிகாரிகள் குறித்த சிறப்புக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவில் அண்மைக்காலமாக ISIS தொடர்பான கைதுகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதியளித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...