follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

Published on

அமெரிக்காவின் டெட்ராய்டில் இருந்து வடக்கே சுமார் 30 மைல்கள் (48 கிலோமீட்டர்) தொலைவில் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப்பில் உள்ள “ஆக்ஸ்போர்டு உயர்நிலை பாடசாலையில்” இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயதுடைய சந்தேக நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் நோக்கம் உடனடியாகத் தெரியாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறிவைத்தும்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை அடுத்து,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...