மாத்தறை − வெலிகம − வெவேகெதரவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயினால், சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூறை உடைந்து வீழ்ந்துள்ளது இதன்போது, வீட்டிலிருந்த 8 வயது சிறுமி, தீக்கிரையாகியுள்ளார்.
தீ பரவும் சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த இருவர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் பரவிய தீயை வெலிகம பொலிஸார் மற்றும் மாத்தறை தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.