follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

Published on

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படியே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது என்பதைக் கூற வேண்டும். கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு சட்டமூலங்களிலும் பல தொழில்நுட்ப விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார போக்கை மாற்றாமல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பது, உலகளாவிய ஒத்துழைப்பை நன்கு பேணுவது மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம். அது மாத்திரமன்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களில் மாறுதல் போன்ற விடயங்களும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவது, போட்டித்தன்மையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுவது மற்றும் ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பது குறித்து இந்த சட்டமூலம் ஊடாக கவனம் செலுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சட்டமூலங்கள் மூலம் இறுதியில், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கும், கடன் கொடுப்பனவுகளை நிலைபேறான மட்டத்தில் பேணுவதற்கும், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முகாமைத்துவம் செய்வதற்கும், கொடுப்பனவு சமநிலையை நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் திசை சரியாக வழிநடத்தப்படுவதை நாம் எதிர்பார்க்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மேலும், அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஊடாக பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான சட்டக் கட்டமைப்பை முன்வைப்பது இதன் மூலம் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்” என்று பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...