நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.