ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ததை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.