follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்ரஷ்ய - உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

Published on

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

கார்கிவ் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மோதலில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

7,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

இருப்பினும், ரஷ்ய படையெடுப்பை அனுமதிக்க மாட்டோம் என்று உக்ரைன் வலியுறுத்துகிறது.

படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக நிறுத்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீர்மானித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி நாளைய தினம் ஸ்பெயின் மன்னரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...