follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

Published on

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (16) தென் மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

சீருடை கொடுப்பனவுடன் ஒப்பிடும் போது ஏனைய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படாமை மற்றும் குறிப்பிட்ட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் போது 15 குழுக்கள் புறக்கணிக்கப்பட்டமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...