follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

Published on

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவும் நேற்றுமுன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை 07 சுற்றுப் பேச்சுக்கள் பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 26ஆம் திகதி அனுராதபுரம் கலாவெவ தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்றிலிருந்து தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் தொகுதிவாரியாக ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...