follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉலகம்ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!

ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!

Published on

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

30 வயதுடைய குறித்த நபருக்கு முன்னதாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  ஒமிக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த நோயாளியின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒமிக்ரான் மாறுபாடு நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாதகாலத்திற்கு எல்லைகளை ஜப்பான் மூடியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவுக்கான உணவு இறக்குமதியை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதிக்கு உணவுகளை வழங்கும்...

சின்வார் கொலை – இஸ்ரேலை மிரட்டும் ஹிஸ்புல்லாஹ்

பலஸ்தீன ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு...

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா...