இந்த வருட க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த வினாத்தாள்கள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.
அத்துடன், விஞ்ஞான வினாத்தாளை அமைத்தவர்கள் கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
“அறிவியல் வினாத்தாளில் உள்ள பல கேள்விகள் மற்றும் பல தேர்வு வினாக்கள் தொடர்பாக, பிரச்சினை எழுந்ததால், அந்த வினாத்தாளை தயாரித்தவர்கள் கூடி, அது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர். மேலும், இது தொடர்பாக, பரீட்சை ஆணையாளர் அறிக்கை வெளியிட்டார். வழக்கமாக, எந்த ஒரு பரீட்சையிலும் ஒரு மாதிரி மதிப்பெண் செய்யப்படுகிறது, எனவே, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் மதிப்பெண் திட்டத்தை தயார் செய்யும்.”
இதேவேளை, ஆங்கில வினாத்தாளுக்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அங்கு ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் நியமனம் மற்றும் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் நியமனத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.